tamilnadu

img

தஞ்சை- நாகை நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தக் கோரிக்கை

மன்னார்குடி: தஞ்சை- நாகை தேசிய நெடுஞ் சாலையை ஏற்கனவே இரு வழி சாலையாக அமைப்ப தற்கான பணி துவங்கி பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகன விபத்துக் கள் அதிகமாக நடைபெறு கிறது. எனவே இந்த சாலைப் பணிகளை  உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் திருவாரூர் வளர்ச்சி குழுமத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் செந்தில் ஆகியோர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மூலம் மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்தி பணிகளை  உடனடியாக தொடங்கி நிறைவேற்றி தர வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி  கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.