தஞ்சாவூர், செப்.12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 1 ஆவது வார்டு சிதம்பரம் சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பேராவூரணி பேரூராட்சி 1 ஆவது வார்டு சிதம்பரம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படா மல், தார்ச்சாலை மண் சாலையாக மாறி, குண்டுங்குழி யுமாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. சுமார் 1 கிமீ தூரம் உள்ள இந்த சாலையில் நூற்றுக்கணக் கான குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் உரு வாகி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக முன்னாள் பேரூராட்சி தலைவர் மறைந்த சொ.சுப்பிரமணி யன் இல்லம் செல்லும், சுமார் 600 மீட்டர் நீளமுள்ள சாலை, பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத நிலையில், தார்ச்சாலையில் உள்ள கப்பிகள் பெயர்ந்து, மண் தரை யாகி, மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், இப்பகுதி குடி யிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நின்று, இவ்வழியே நடந்து செல்லும், பள்ளி சிறுவர்கள், பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியை பார்வையிட்டு, உடனடியாக புதிய சாலை அமைத்து தரவும், கழிவுநீர் சாலையில் செல்லாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். சாலை அமைக்க உரிய நட வடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி சம்பந்தப் பட்ட அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத் தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு தெரி வித்துள்ளது.