tamilnadu

img

ஓய்வூதியர்கள் கருத்தரங்கு

தஞ்சாவூர், டிச.19- தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் புதன் கிழமை மாலை தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், “ஓய்வூதியர் தினம்” கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கூட்டமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.தமிழ் மணி வரவேற்றார்.  தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர். கலியமூர்த்தி, எம்.முனி யாண்டி, போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் ஏ.சி.தூயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் ‘ஓய்வூதி யம்’ என்ற தலைப்பிலும், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிர மணியன், ‘அரசுகளின் அணுகுமுறை’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றி னர். ஆசிரியர் அரங்கம் என்.குருசாமி, போக்குவரத்து அரங்கம் எஸ்.ஞான சேகரன் ஆகியோர் பேசினர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் ஜி.பூபதி நன்றி  கூறினார்.  கூட்டத்தில், “பாரபட்சம் நிறைந்த குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜ கோபால் முன்மொழிய, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்க அமைப்பு மாவட்ட தலைவர் எம்.முனியாண்டி வழிமொழிந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.