பெண்ணுரிமை போராளியும், பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர் பாப்பா உமாநாத் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது. இதையொட்டி செவ்வாய்க் கிழமை மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக் குறிச்சியில் அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் சி.கலாவதி, ஒன்றிய நிர்வாகிகள் எம்.கீதா, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.