tamilnadu

img

ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக செரீனா வில்லியம்ஸ்க்கு ரூ.7 லட்சம் அபராதம்

விம்பிள்டன் போட்டியின் போது ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்ற மூத்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக பயிற்சி போட்டியின் போது ஆடுகளத்தை அவர் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆல் இங்கிலாந்து கிளப் அமைப்பானது, செரீனா வில்லியம்சுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதேபோல் போட்டியில் தோல்வியுற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இத்தாலி வீராங்கனை ஃபாபியோ பாக்னினி, விம்பிள்டன் தொடரில் குண்டுவெடிக்க வேண்டும் என்று கூறியதால் அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.