tamilnadu

img

நுண்நிதி நிறுவனங்களை தடை செய்ய ஆலங்குளம் வட்டாட்சியரிடம் மாதர் சங்கம் மனு

தென்காசி, ஜூன் 11- ஊரடங்கு காலத்திலும் நிர்ப்பந்தித்து கடன் வசூலில் ஈடுபடும் நுண்நிதி நிறு வனங்களை தடை செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வட்டாட்சியரிடம் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மனு கொடுத்தது . அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் செயல்பட்டு வரும் நுண்நிதி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுய உதவிக்குழு பெண்களிடம் கடனை திருப்பி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் குழு கடனை செலுத்த முடியாத பட்சத்தில் பெண்களை அவ தூறாக பேசும் நிறுவனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மேற்படி நுண்நிதி நிறுவனங்களை நடத்தும் பொறுப்பாளர்களின் கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், கோட் டாட்சியர் ,வட்டாட்சியர் ,காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் ஏற்பாடு செய்ய வேண்டும்.அதில் மாதர்சங்க தலை வர்களையும் பங்கேற்க செய்ய வேண் டும். அந்த கூட்டத்தில் குழு கடனை ஊர டங்கு முடியும் வரை தள்ளுபடி செய்ய வும். பெண்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பதையும் எழுதி வாங்க வேண்டும் என் அதில் கூறப்பட்டிருந்தது,  இந்த மனு கொடுக்கும் இயக்கத் திற்கு மல்லிகா தலைமை வகித்தார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் கற்பகம் மற்றும் நிர்வாகிகள் சுந்தரி,வசந்தி உள்பட 100 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.