tamilnadu

img

இந்து முன்னணியினருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

மதத்தின் அடிப்படையில் மாணவர்கள் மனதில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய இந்து முன்னணியினருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்காசி அச்சங்குட்டத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளியில் மதப் பிரச்சனையை ஏற்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணியினர் 11 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதத்தின் அடிப்படையில் மாணவர்கள் மனதில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய இந்து முன்னணியினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 11 பேரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.