தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே.பிராபகரனை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் உள்துறைச் செயலராக இருந்த நிரஞ்சன் மார்டியின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய உள்துறைச் செயலராக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.கே.பிரபாகரன், கடந்த1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். இவர் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளார். கவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர் மற்றும் ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் முதன்மை செயலராக இருந்த இவரை தற்போது, தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.