tamilnadu

img

நிவாரண உதவி கோரி போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சிஐடியு கண்டனம்

சென்னை, ஏப்.23-  நிவாரண உதவி கோரி சமூக விலகலுடன் வீட்டு முன்பு கூடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததற்கும் சிஐடியு தமிழ் நாடு மாநிலக்குழு கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் உழைப்பாளி மக்கள் வேலையில்லாமல் ஊதியமில்லாமல் வாழ் வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். 30 நாட்க ளாக வெளியில் செல்லாமல் கைவசம் உள்ள பணத்தை வைத்தும் உணவுப்பொருட்களை வைத்தும் வாழ்க்கையை நடத்தி வருகின்ற னர். ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க உணவுப் பொருட்கள் வழங்கக் கோரியும், நிவாரண உதவிகள் வழங்க கோரியும் சிஐடியு சார்பில் நாடு முழுவதும் ஏப்ரல் 21 அன்று தொழிலாளர்கள் தங்களது வீட்டு முன்பு கோரிக்கைகளை முன்வைத்து 5 நிமிடம் நின்று அரசை வலியுறுத்த அறை கூவல் விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் தமிழகத்தில் அன்றைய தினம் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சமூக விலகலை கடைப்பிடித்து கோரிக்கைகளை வலியு றுத்தி யுள்ளனர்.

இந்த ஜனநாயக வடிவிலான இயக்கத்தில் பங்கெடுத்த தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தமிழக காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும், வழக்கு பதிவதும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசை குறைசொல்வதற்காக நடத்தப்பட்ட இயக்கம் அல்ல இது. தங்களு டைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியு றுத்துவது சட்டவிரோதமாக காவல்துறை பார்ப்பது கொரோனா ஊரடங்கின் போது ஆளும் தரப்பினருக்கு எதிராக எவரும் பேசக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில் காவல்துறை நடந்து கொள்வது ஏற்புடைய தல்ல.

குறிப்பாக தேனி, திருப்பூர், புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் நடை பெற்றுள்ளன. தமிழக அரசும், காவல்துறையும் இப் பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.