சிவகங்கை,செப்.21- இளையான்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இலையான்குடியில் செப்டிக் டேங்க் கழிவுகளைச் சுத்தம் செய்ய முயன்றபோது தூய்மைப் பணியாளர்கள் ராமையா(56), பாஸ்கரன்(50) ஆகியோர் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரது உடல்களும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.