tamilnadu

img

மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி காவலாளி கைது

காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு, விடுதியின் காவலாளி அழகப்பன் (56) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் இது தொடர்பாகக் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் புகார் அளித்துள்ளனர்.
இதை அடுத்து, அழகப்பபை கைது செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.