tamilnadu

img

முதிர்வுத் தொகையை கேட்டு ‘செபி’ அலுவலகம் முற்றுகை

சென்னை, ஜூலை 25- முதிர்வுத் தொகையை கேட்டு  வியாழனன்று (ஜூலை 25) ‘செபி’ அலுவலகத்தை முற்றுகையிட்டு முதலீட்டாளர்களும், களப்பணி யாளர்களும் போராட்டம் நடத்தினர். இந்தியா முழுவதுமிருந்து பிஏசிஎல் என்ற காப்பீட்டு நிறு வனத்தில் சுமார் 6 கோடி பேர் முத லீடு செய்திருந்தினர். இந்த நிறு வனம் சில ஆண்டுகளுக்கு முன்  மூடப்பட்டது. இந்த வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், 2016 பிப்ர வரி 2 அன்று தீர்ப்பளித்தது. அதில், பிஏசிஎல் நிறுவனத் தின் நிலம் மற்றும் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு 6 மாதத்திற்குள் பணத்தை வழங்க ‘செபி’க்கு உத்தரவிட்டது. மேலும் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அதற்கான குழுவையும் அமைத்தது.

இந்தக்குழு அமைக்கப்பட்டு 40 மாதங்களாகியும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு பணம் வழங்கவில்லை. பல்வேறு நிபந்த னைகளையும், சாத்தியமற்ற பல கட்டுப்பாடுகளையும் விதித்து  முதலீட்டாளர்களை அலைகழிக்  கின்றனர். முதலீட்டாளர்கள் மட்டு மின்றி, இந்நிறுவன முகவர்களாக பணியாற்றியவர்களும் நெருக் கடிக்குள்ளாகி உள்ளனர். இந்தப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலை யிட்டு தீர்வு காண வலியுறுத்தி சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘செபி’ அலுவலகத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், களப்பணி யாளர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து பிஏசிஎல் முதலீட்டாளர்கள், பிஏசில் களப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பிஏ சிஎல் போராட்டக்குழு (சிஐடியு) நிர்வாகிகளுடன் ‘செபி’ அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதற்கிடையே துணை மேலாளர் சுகதேவுடன் சங்க நிர்வாகிகள் கோபிகுமார், மணிகண்டன், ஜோதி, மணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் நீதி பதி லோதா கமிட்டி தலைவரி டம் பேச்சுவார்த்தை நடத்த அனு மதி பெற்றுத் தருவதாகவும், கோரிக்கைகள் குறித்து மேல்  அதிகாரிகளுக்கு தெரிவித்து 15 நாட்களுக்குள் பதில் அளிப்ப தாகவும் உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.