உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,நவ.22- கோவில் நிலங்களில் 5 ஆண்டு களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக் காலத்தடை விதித்து உத்தர விட்டுள்ளது. கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்த வர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிர மிப்பவர்களுக்கு உதவும் வகை யில் இந்த அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர் களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.