tamilnadu

img

வெளிநாடுகளில் இருந்து வேடசந்தூர் திரும்பிய  15 பேருக்கு பரிசோதனை 


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, மலேசியா, ஜெர்மன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு 15 பேர் வந்தனர் அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர்  பரிசோதனை செய்து அவர்கள் விடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய 15 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் பாதுகாப்புக் கருதி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளை சுற்றி கிருமி நாசினி, குளோரிங் பவுடர், பிளிச்சிங் பவுடர் ஆகியவற்றை சுகாதாரத்துறையினர் தூவி நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.