tamilnadu

img

‘எதிர்மறை மாணவர்களை நேர்மறையாக்குவதே ஆசிரியர் பணி’ கவிஞர் தங்கம்மூர்த்தி பேச்சு

 புதுக்கோட்டை, ஆக.21-  புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியது: பரமபத விளையாட்டில் தாயம் மேலே ஏறும்போது பாம்பு கடித்தால் அதன் வால் இருக்கும் இடம் வரை கீழே இறங்கும். மீண்டும் காயை உருட்டி மேலே ஏற வேண்டும். அதைப்போல சமுதாயத்திலும் ஏராளமான பாம்புகள் தடைக்கல்லாக இருக்கும். அதைத் தாண்டித்தான் சிக ரத்தை எட்டமுடியும். வருங்காலத்தில் ஆசிரியராக பணி யாற்ற உள்ளீர்கள். எதிர்மறையாக உள்ள மாணவர்களை நேர்மறையாக மாற்றக்கூடியவர்கள் தான் ஆசிரியர்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் தினந்தோறும் கற்றுக்கொள்கின்றனர். அதையும் தாண்டி புதிய விச யத்தை தெரிந்து கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்றார்.  விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலை வர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே.ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணைமுதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி வரவேற்க, உதவிப் பேராசிரியர் ஏ.எவாஞ்சலின் அருள் தீபா நன்றி கூறினார்.