புதுக்கோட்டை, அக்.26- ஆக்ஸ்போர்டு உணவகக் கல்லூரியில் நடத்தப்பட்ட மாணவர் போட்டிகளுக்கான முடிவுகளை போட்டிகளின் அமைப்பா ளர் கவிஞர் நா.முத்துநிலவன் வெளி யிட்டுள்ளார். அந்த விவரம் வருமாறு- கல்லூரி மாணவர்க்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் மாமன்னர் கல்லூரி மாணவி த.மு.ரோஜா, இரண்டாமிடம் ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி மாணவி து.பிரபா, மூன்றாமிடத்தை பூலாங்குறிச்சி வ. சே.சிவ. அரசுக் கலைக்கல்லூரி மாணவர் சா.ஜனார்த்தனம், மாமன்னர் அரசு கலைக் கல்லூரி மாணவர் செ.க.விஸ்வநாத் இரு வரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்க்கான ஓவியப் போட்டி யில் முதலிடம் மௌண்ட் சீயோன் பள்ளி மாணவி சு.பாலசுந்தரி, இரண்டாமிடம் கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவர் மு.பிரதீப், மூன்றாமி டத்தை மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.பூவேந்தனும், ஜெய ராணி மெட்ரிக் மேநிபள்ளி மாணவி ர.ஜோ திகாவும் பகிர்ந்து கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்க்கான கட்டுரைப் போட்டி யில் முதலிடம் திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி லெ.பவ தாரணி, இரண்டாமிடம் மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி மாணவி க.பவித்ரா பானு, மூன்றாமிடத்தை இராணியார் அமேநி பள்ளி மாணவி முரு.சிந்துவும், ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேநிபள்ளி மாணவி க.சுவேதா ஆகியோர் பகிர்ந்துகொள்கின்ற னர். மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்க்கு 31-10-2019 அன்று மாலையில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற விருக்கும் “காந்தி-150, மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கம்” விழாவில், மதுரை மக்களவை உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரு மான சு.வெங்கடேசன் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.