tamilnadu

img

ரூ.6.70 லட்சம் மதிப்பில் நெடுங்குடியில் தலித் சுடுகாடு கட்டமைப்பு

புதுக்கோட்டை, ஜூன் 2- அரிமளத்தை அடுத்த நெடுங்குடி யில் உள்ள தலித் மக்களுக்கான சுடுகாடு ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் தாலுகா அரிமளம் ஒன்றி யத்தில் உள்ள நெடுங்குடி கிரா மத்தில் தலித் மக்களுக்கான சுடுகாடு உள்ளது. சுடுகாட்டிற்கு அருகி லேயே பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான சுடுகாடும் உள்ளது. பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சுடுகாட்டில் நடைபாதை, தகன மேடை, சுற்றச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசாங்கத்தி னால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், தலித் மக்களுக்கான சுடுகாட்டிற்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதைகூட இல்லை. இந்நிலையில், தலித் மக்களின் சுடுகாட்டை அங்கிருந்து அப்புறப் படுத்தும் நடவடிக்கையில் பிற்படுத்த சமூகத்தில் உள்ள சில சாதிவெறி யர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்த னர். இதனால், தலித் மக்கள் கடுமை யான சிரமத்தை சந்தித்து வந்தனர். தலித் மக்களில் யாரேனும் இறக்க நேரிட்டால் நேரடியாக சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து வர முடியாது. இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு சுற்றித்தான் வரவேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின.

கடந்த 2018 ஜூலை 25-ல் அரி மளத்தில் ஆர்ப்பாட்டம். 2018 செப்.30  தோழர் பிஎஸ்ஆர் நினைவு தினத்தில் நேரடி நடவடிக்கை, 2018 அக்.9 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக உண்ணாவிரதம் என பல்வேறு கட்டங்களில் போராட்டங் கள் நடைபெற்றன. தொடர்ந்து சங்கத் தலைவர்கள் சுடுகாட்டிற்கான அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரிமளம் ஒன்றியப் பொதுநிதி பணிகள் மூல மாக ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை, சுற்றுச்சுவர், சிமெண்ட சாலை உள்ளிட்ட பணிகள் தற்பொ ழுது நடைபெற்று வருகின்றன.

பணிகளை அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் மற்றும் பி.ஆவுடைமுத்து, ஆ.மணி, எம்.அடைக்கப்பன், சுகி, கணேசன், வீரப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதுகுறித்து வி.தொ.ச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கூறுகையில், இது தீ.ஒ.மு., விதொச, மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், தொடர்ந்து தலித் மக்களுக்கு பாதுகாப்பாக களத்தில் நிற்போம் எனவும் தெரிவித்தார்.