tamilnadu

img

சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி விழா

 பெரம்பலூர், அக்.25- பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் வெள்ளியன்று மாணவ, மாணவிகளின் தீபாவளி திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். வழிபாட்டு பாடலுடன் துவங்கி தீபாவளி திருநாள் குறித்து மாணவ மாணவிகளின் விழிப்பு ணர்வு நாடகம் நடைபெற்றது.  பின்னர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பட்டாசு வெடித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பள்ளி செயலாளர் சிவக்குமார், பங்குதாரர்கள் மோகன சுந்தரம், பொருளாளர் பிரபு, கமிட்டி உறுப்பினர்கள் இளஞ்செழியன், முருகேசன் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒருங்கி ணைப்பாளர்கள் சந்திரோதயம், ஹேமா மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.