tamilnadu

img

கண்ணூர் விமான நிலையம் மேம்படுத்தப்படும்

திருவனந்தபுரம், செப். 1- கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு கூடுதலாக வெளிநாட்டு விமா னங்கள் வந்து செல்வதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளது என்று அந்த விமான நிலையத்தின் இயக்குநர் வி.துளசிதாஸ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கண்ணூர் விமான நிலையத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க ப்ளை துபாய், ஏர் அரேபியா உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.  இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உள்நாட்டு விமானத்துறையின் முதன்மைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிரால் கூறுகையில், திரு வனந்தபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார்.