tamilnadu

img

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம்

உதகை, மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு நீலகிரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் ஞாயி றன்று கொண்டாடப்பட்டது. அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசி மோகன் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். 16 வயதிற்குட்பட்ட மாணவிகள், 16 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் என இரண்டு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங் கினார்.  முன்னதாக நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்கு னர் சண்முகப்பிரியா, துணை மாவட்ட ஆட்சியர் கீதா பிரியா ஆகியோர் கருத் துரை வழங்கினார்.