1898 - அமெ ரிக்க வரலாற்றின் ஒரே ஆட்சிக் கவிழ்ப்பு என்று குறிப்பிடப்படும், வில்மிங்டன் உள்ளாட்சி அரசின் கவிழ்ப்பு நடைபெற்றது. (அமெரிக்காவில் மாநிலங்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளும் அதிக அதிகாரங்களுடன், அரசு என்றே அழைக்கப்படுகின்றன.) வடகரோலினாவிலுள்ள நகரமான வில்மிங்டனில் 1860களுக்குமுன் பெரும்பான்மையாகக் கருப் பினத்தவரே வசித்துவந்தனர். எண்ணிக்கையில் பெரும் பான்மையென்றாலும், வீட்டுவேலை போன்ற வேலை களில்தான் இருந்தனர்.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின், அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட கருப்பினத்த வர்கள் ஏராளமாக நகரப் பகுதிகளுக்கு வந்தனர். ஒன்றிரண்டு கருப்பினத்தவர்கள் பெரிய தொழில்களைச் செய்தாலும், பெரும்பான்மையோர் மிகவும் ஏழ்மை நிலையிலேயே இருந்தனர். கருப்பினத்தவரின் தொழில் நிறுவனங்கள் வெள்ளையரால் அவ்வப்போது தீவைத்து எரிக்கப்படுவதும் நடந்தது.
வறுமையிலிருந்த இவர்களுக்குக் கடன்களுக்குக் கூட இரு மடங்கு வட்டி வசூலிக்கப்பட்டது என்பதுடன், கடனை (தவணைகளாக இன்றி) மொத்தமாக மட்டுமே திருப்பிச் செலுத்தவேண்டும் என்றெல்லாம் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இவற்றால், நகரின் மொத்த வரி வருவாயில், (செல்வந்தர்களான) வெள்ளையர்களின் பங்கு 96 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில், கருப்பினத்தவர்களையும் உறுப்பினர்களாகக்கொண்ட ரிப்பப்ளிக்கன் கட்சி இந்த உள்ளாட்சியைக் கைப்பற்றி யதில் கருப்பினத்தவர் அதில் பதவிக்கும் வந்ததை வெள்ளை யர்களால் ஏற்க முடியவில்லை. அடிமைமுறைக்கு ஆதரவாக உள்நாட்டுப்போரில் ஈடுபட்டவர்கள் போருக்குப்பின் கு-க்ளக்ஸ்-க்ளான் அமைப்பில் சேர்ந்தாலும், அந்த அமைப்பு 1870களில் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவப்புச் சட்டை கள் என்னும் அடியாள்படை உருவாகியிருந்தது.
கருப்பினத்த வரால் தங்கள் வேலைவாய்ப்பு பறிபோவதாக எண்ணிய ஏழை வெள்ளையர்கள் உள்ளிட்ட, வெள்ளையரின் மேலா திக்கத்தை வலியுறுத்துவோரை உறுப்பினர்களாகக் கொண்ட இவ்வமைப்பினர் சிவப்புச் சட்டைகளை அணிந்தனர். கார்ப்பெட்பேக்கர் என்றழைக்கப்பட்ட, தங்கள் வேலை வாய்ப்பைப் பறிக்கும் கருப்பினத்தவர் உள்ளிட்டோரில் ஒருவரை கு-க்ளக்ஸ்-க்ளான் அமைப்பினர் தாக்கியதில் அவர் இரத்தத்தில் தோய்ந்த சட்டையைக் கையில் பிடித்த படி பெஞ்சமின் பட்லர் உரையாற்றியதால் இந்த சிவப்புச் சட்டை தோன்றியதாகக் கூறப்பட்டாலும், அதற்கு ஆதா ரங்கள் இல்லை. இந்தச் சிவப்புச் சட்டைக்காரர்கள் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரம்பேர், வில்மிங்டனிலிருந்த கருப்பினத்த வரின் ஒரே செய்தித்தாளான தி டெய்லி ரெக்கார்ட் அலுவல கத்தைக் கொளுத்தித் தரைமட்டமாக்கியதுடன் ஏராளமான கருப்பினத்தவர்களையும் இந்நாளில் படுகொலை செய்த தால் இது ஓர் இன மோதல் என்றே அமெரிக்க வர லாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கருப்பினத்தவர் ஆட்சி யதிகாரத்தில் இருப்பதை ஏற்காத வெள்ளை மேலாதிக்க வெறியால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு என்பது பின்னா ளில் வெளியான ஆதாரங்களின்மூலம்தான் வெளிப்பட்டது.
- அறிவுக்கடல்