புதுதில்லி, ஏப்.8- கொரோனா தொற்றால் அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் தமிழகமும் உள்ளது. இந்தியாவில் புதன்கிழமை மாலை 4.25 மணி நிலவரப்படி 5,274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். 421 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்திலுள்ள தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள தில்லியில் 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 100 முதல் 229 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 அல்லது 2 என்ற அளவிலேயே உள்ளது.
மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மும்பை புறநகர் பகுதியில் மட்டும் 319 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், மும்பையில் 525 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர் என மும்பை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் சமூகத்தில் பரவும் நிலைக்குச் சென்றுவிட்டது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. தாராவி, குர்லா, நேருநகர், பந்த்ரா, அந்தேரி பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மும்பை மாநகராட்சியின் மிகப் பெரிய வார்டான ஜி தெற்கு பகுதியிலிருந்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 78 பேரிலும் மீனவர் காலனி, ஒராலி, பிரபாதேவி ஆகிய இடங்களிலிருந்து அதிகமானோர் வந்துள்ளனர்.
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்தோப் தாராவி உள்ளிட்ட சில பகுதிகளை ஆய்வு செய்தார், பின்னர் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வெண்டிலே ட்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆய்வும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. தொற்று பரவல் அதிகமிருந்தாலும் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது என்றார்.