tamilnadu

img

காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதால் பதவி விலகிய ஆட்சியர்

திருவனந்தபுரம், ஆக.25- காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமை கள் பறிக்கப்பட்டதால் பதவியிலிருந்து வில குவதாக தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனி யன் பிரதேசத்தின் ஆட்சியர் தெரிவித்துள் ளது,அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனி யன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு கேரளா வில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவா ரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் கவ னத்தை கவர்ந்தார். 

கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவற்கான காரணம் குறித்து கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக் கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பெரு வாரியான மக்கள் கவலை கொள்ளவில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த முடிவை வரவேற்கவும், எதிர்ப்பு தெரி விக்கவும் அங்கு வாழும் மக்களுக்கு உரிமை உண்டு. மக்களின் குரலாக இருப்பதற்கா கத்தான் நாம் பதவிக்கு வருகிறோம். ஆனால் இங்கு எங்கள் குரலே எங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. நான் பதவி விலகுவதால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதி யாக இருப்பதை நான் விரும்பவில்லை. எனது மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  தனது ராஜினாமா கடிதத்தை மேலி டத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவர் களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவ தற்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனங்களு டன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தை களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வந்தார்.