tamilnadu

img

காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷித்

புதுதில்லி
தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் உடல்நலக்குறைவால் காலமானார்.
பஞ்சாப் மாநிலம் காபுர்தாலாவில் 1938  மார்ச் 31 ம் தேதி ஷீலா திக்‌ஷித்  பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை புது தில்லியில் உள்ள கான்வெண்ட் ஆப் ஜீசஸ் அண்ட் மேரி பள்ளியிலும், பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 
இவர் 1998முதல் 2013 வரை 15 ஆண்டுகளாக தில்லி முதல்வராக பதவி வகித்தார். 2014 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தார். இந்நிலையில் இருதய கோளாறு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீக்ஷித் சிகிச்சை பலனின்றி இன்று உயரிழந்தார்.