புதுதில்லி, செப்.26- அருண்ஜெட்லி(உ.பி.), ராம்ஜெத் மலானி(பீகார்) காலமானதை அடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. வரும் அக்டோபர் 16-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 27-ம்தேதி தொடங்கும். அக்டோபர் 4-ம்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.