மாநிலங்களவை உறுப்பினர்களாக பலர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவராக வந்து பதவியேற்று வருகின்றனர். புதனன்று மாநிலங்களவையில் மேற்குவங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான பிகாஷ் ரஞ்சன் பட்டார்ச்சார்யா பதவியேற்றுக் கொண்டார்.