புதுதில்லி, ஏப்.11- இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,529 ஆக அதிகரித்துள் ளது. அதே நேரத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 206 இல் இருந்து 242 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 516 இல் இருந்து 653 ஆக உயந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை ஐந்துமணி நில வரம் வருமாறு:
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,574 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழப்பும் அந்த மாநி லத்தில்தான் மிக அதிகமாக, 110 ஆக உள்ளது. மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதி கம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டி யலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 969 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு பத்தாக அதிகரித்துள்ளது. தில்லியில் 903 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள் ளது. அங்கு இதுவரை 13 போ் உயிரி ழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத் தில் 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் 504 பேருக்கும், ஆந்திராவில் 381 பேருக்கும், ராஜஸ்தா னில் 553 பேருக்கும், உத்தரப் பிர தேசத்தில் 433 பேருக்கும், ஆந்திரத்தில் 381 பேருக்கும், கேரளத்தில் 364 பேருக் கும், குஜராத்தில் 308 பேருக்கும் இது வரை கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 643 போ் கொரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனா். 239 பேர் உயிரிழந் துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தான் கொரோனா நோய்த்தொற்று குறை வாக உள்ளது. அங்கு மணிப்பூரில் இரு வருக்கும், அருணாசலப் பிரதேசம், திரி புரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரேனா உறுதி யாகியுள்ளது. மேகாலயத்தில் மட்டும் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை. இந்தியாவில் கொரானோ நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டிவிட்டது. இந்த நிலையில் முதல்வர் உத்தவ் தாக் கரே பிரதமர் மோடியிடம் சனிக்கிழமை காணொலிகாட்சி மூலம் உரையாடி னார். இதையடுத்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது என்றார்.