tamilnadu

img

பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளருக்கு 10 லட்சம் நிவாரணம் மாநகராட்சி உதவி ஆணையரிடம் சிஐடியு மனு

திருநெல்வேலி, ஆக.6- சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாநகராட்சி உதவி ஆணையர் சுகி பிரேமலதாவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி மேலப் பாளையம் மண்டலத்தில் தூய்மை பணி செய்யும் பாக்கியம் என்ற தொழிலாளி பணியின் போது விபத்து ஏற்பட்டு ஒரு கை துண் டிக்கப்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அவ ருக்கு ஒரு லட்சம் நிவாரண நிதி அரசு வழங்கியிருக்கிறது, அது வரவேற்கத்தக்கது. எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அதற்கு நெல்லை மாந கராட்சி நிர்வாகம் தமிழக அர சுக்கு பரிந்துரை செய்ய வேண் டும். மேலும் பாதிக்கப்பட்ட தொழி லாளியின் வீடு மிக மோசமான  நிலையில் உள்ளது எனவே தொழி லாளிக்கு தனியாக வீடு கட்டு வதற்கான இலவச பட்டாவும் வீடு கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது. மனு கொடுக்கும் போது சிஐ டியு மாவட்ட கவுரவ தலைவர் பா.வரகுணன் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்க நிர்வாகிகள் உடன் இருந் தனர்.