tamilnadu

img

நாமக்கல் அருகே கொள்ளை கும்பலை மடக்கிப்பிடித்த காவல்துறை

நாமக்கல்,செப்.27- கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் நாமக்கல் அருகே மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நாமக்கல் மாவட்டம் பச்சைப்பாளையம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாகச் சென்றுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கண்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட கண்டெய்னரில் ஆயுதங்கள், கட்டுகட்காகப் பணம் மற்றும் பதிவு எண் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ATMகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும் குற்றவாளிகள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.