tamilnadu

img

தொழில்நுட்ப கண்காட்சி: ஏவிசி மாணவர்களுக்கு பரிசு

மயிலாடுதுறை, மார்ச் 8- கோவையில் பாரதியார் பல்க லைக்கழகம், இந்துஸ்தான் கல் லூரி மின்னணு துறை சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட் பத்தில் வளர்ந்து வரும் போக்கு கள் குறித்த தேசிய மாநாடு மற் றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏவிசி கல் லூரி மின்னணு மற்றும் இயற்பி யல் துறை மாணவர்கள் எம். தினேஸ்வரன், ஆர்.அருண் குமார் ஆகியோர் மின்னணு திட்ட கண்காட்சியில் மூன்றாம் இடத்தையும், ஏ.ஆர்த்தி, எஸ்.ஆர்த்தி ஆகியோர் சுற்று பிழைத் திருத்தத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.  சாதனை மாணவர்களை கல்லூரியின் தலைவர் என்.விஜய ரெங்கன், செயலர் கி.கார்த்தி கேயன், கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆர்.நாகராஜன், மின்னணு துறைத் தலைவர் கே.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பாராட்டினர்.