தரங்கம்பாடி, டிச.9- நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம்பேட்டை கிராமத்தில் மணல் கொள்ளையால் உயிரிழந்த சிறுவனின் இறப்பிற்கு உரிய நீதி கேட்டு திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சோழம்பேட்டை கிராமத்திலுள்ள வானமுட்டி பெருமாள் கோவில் குளத்தை தூர்வாருவதாகக் கூறி அதேப் பகுதியில் வசிக்கும் காவல் துறையில் பணியாற்றும் மணி கண்டன் என்பவர் தனது உறவினர் ஒருவரின் பெயரில் அனுமதி பெற்று விதிகளை மீறி சட்ட விரோதமாக நாள் தோறும் பல நூறு லாரிகளில் மணலை கொள்ளையடித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர் என்ப தால் பொதுமக்கள் மணல் கொள்ளையை எதிர்க்காததை பயன் படுத்தி 50 அடி ஆழத்திற்கும் மேல் குளத்தை தோண்டி 1500 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணலை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி யுள்ளார். இதுகுறித்து பல முறை வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் நீர் நிரம்பி இருந்த அக்குளத்தில் கடந்த 26/09/19 அன்று தனது நண்பர்களுடன் குளத்தின் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சண்முகம் -பிரேமா தம்பதியின் மகனான 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சஞ்சய்குமார் கரை உடைந்து குளத்தினுள் விழுந்து அதிகளவு ஆழமாக இருந்ததால் நீரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணல் கொள்ளையால் சிறு வனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உட னடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதோடு, சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், நீதியும் வழங்கிடக் கோரி திங்க ளன்று உண்ணாவிரதப் போராட் டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அறி வித்திருந்த நிலையில் கோட்டாட்சி யர் கண்மணி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவா சன், ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், வட்டச் செயலாளர் சி.மேகநாதன் உள்ளிட்ட தலைவர்கள், அரசு அதி காரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியி லிருந்து நிவாரணம் வழங்கிடவும், உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்து ரைப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட் டது. ஏற்றுக் கொண்ட இக்கோரிக்கை களை நிறைவேற்ற தாமதித்தால் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடை பெறும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.