tamilnadu

img

மாவீரன் பகத்சிங் நினைவு தினம்

தரங்கம்பாடி: மாவீரன் பகத்சிங் நினைவு தினம், நாகை மாவட்டம் திருக்கடையூர், டி.மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பகத்சிங் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கே.பி.மார்க்ஸ், முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் ஏ.ரவிச்சந்திரன், குணசுந்தரி மற்றும் சங்க நிர்வாகிகள், மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.