மும்பை:
மகாராஷ்டிர மாநிலம்மும்பை ஆர்தர் ரோடு சிறை யில் 77 சிறைவாசிகள், 26 போலீசார் என 103 பேருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டிருந் தது. இந்நிலையில், இந்தசிறைச்சாலையில் மேலும் 81 சிறைவாசிகளுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.