tamilnadu

img

மும்பை: கனமழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

மும்பையில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருவதால் சாலை, ரயில், விமான போக்குவரத்து முடக்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களில் நீர் தேங்கி உள்ளதால் ரயில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும்  தரையிறங்குவதிலும் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் தற்காலிக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.