tamilnadu

img

புதிய திட்டங்களை அறிவிக்கும்போது அதற்கான ஊழியர் கட்டமைப்பையும் உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

புதிய திட்டங்களை அறிவிக்கும்போது அதற்கான ஊழியர்  கட்டமைப்பையும் உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும்  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜுன் 7-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபு, மாநிலச் செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் திருவரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள், எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.  ஒன்றியங்கள் பிரிக்கவேண்டும் கூட்டத்துக்குப்பின் மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இவற்றில், 20-க்கும் மேற்பட்ட ஒன்றியங்களை பிரித்து, புதிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக வலி யுறுத்தி வருகிறோம். ஏற்கனவே, பல புதிய மாவட்டங்கள், தாலுகாகளால் பிரிக்கப் பட்டுள்ளன. ஆனால், ஒன்றியங்கள் மட்டும் பிரிக்கப்படவில்லை. 9 ஒன்றியங்களை பிரிக்கும் கருத்துரு அரசு பரிசீலனையில் உள்ளதாக கூறினாலும், அதற்கான நடவடிக்கையும் இல்லை.  தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 526 கிராம ஊராட்சிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, 30 சதவீத கிராம ஊராட்சிகளையும் பிரிக்க  வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். ஆனால், இவை பிரிக்கப்படாத தால், ஏற்கனவே, துறையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஊழியர்களுக்கு பணிச்சுமை, கூடுதல் அழுத்தம் ஏற்படு கிறது. ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதனடிப்படையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அவர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். அதன்படி, 2 மாதங்களுக்குள் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநில செயற்குழுவை கூட்டி போராட்டம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.  ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய புதிய திட்டங்களை தொடங்கும் போது, ஏற்கனவே, உள்ள குறைந்த அலுவலர்களை கொண்டே அப்பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், புதிய திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஊழியர் கட்டமைப்பையும் உரு வாக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.