பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆர்வமுடன் வகுப்பறையில் அமர்ந்து தண்ணீர் அருந்திய மாணவர்கள்.
சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம் திங்கட்கிழமை (ஜூன் 30) முதல் நடைமுறைக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை 11 மணி, பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.