tamilnadu

img

மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றவாளி இஸ்ரேல் அரசு

மனித குலத்திற்கு எதிரான போர்க் குற்றவாளி இஸ்ரேல் அரசு

இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

“மத்திய கிழக்கில் போரை உடனே நிறுத்துங்கள்”

டெஹ்ரான்/டெல்அவிவ், ஜூன் 19- ஈரான் துடே கட்சி மற்றும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறி நடத்துகிற போர் நடவடிக்கைகளை கண்டித்து கூட்டறிக்கை வெளி யிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு கண்டனம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிர மிப்பு போர்கள் மற்றும் சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறி ஈரான் மீது  நடத்தி வரும் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என்று இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இரண்டு நாடு களிலும் பொதுமக்கள் உயிரிழப்பு களுக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான இராணுவ நடவடிக்கை களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான அழிவு ஏகாதிபத்திய அமெரிக்கா, இங்கி லாந்து, ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி களின் ஆதரவுடன் பெஞ்சமின் நேதன்யாகுவின் பிற்போக்குத்தன மான அதிதீவிர வலதுசாரி அரசு காசா  மற்றும் மேற்குக் கரையில் செய்துள்ள குற்றங்களின் விளைவாக, 55,000 பாலஸ்தீனர்கள் (18,000 குழந்தைகள்) படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அரசாங்கம் தான் இஸ்ரேல் அரசு என்றும் தெரி வித்துள்ளது. ஏகாதிபத்தியத்தின்  நீண்டகால திட்டம் நேதன்யாகு அரசிற்கு அமெரிக்கா வின் நீண்டகால இலக்குகளுக்கு ஏற்ப மத்திய கிழக்கின் வரைபடத்தை மீண்டும் மாற்றுவதற்காக (நாடுகளை ஆக்கிரமிப்பது/ஆட்சி கவிழ்ப்பு நடத்தி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஆட்சியை கொண்டு வருவது) இந்த பிராந்தியத்தில் உள்ள  நாடுகளின் மீது கூடுதலான ஆக்கிர மிப்பு போர்களுக்கும் “அனுமதி” கொடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேற்கொண்டு தீவிரமாக்கும் அபாயம் ஈரான்-இஸ்ரேல் இடையே நடை பெற்று வரும் போரையும் அழிவை யும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இந்த நிலைமையை பயன்படுத்தி காசா மற்றும் ஆக்கிர மிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள  பாலஸ்தீன மக்களின் மீதான மனிதாபி மான கொடுமைகளையும் ஒடுக்கு முறையையும் மேலும் தீவிரப்படுத்து வதற்கு எதிராகவும் எச்சரிக்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளன. சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு பாலஸ்தீன மக்கள் மற்றும் இந்த பிராந்தியத்தில் வாழ்ந்து வரும்  மக்களுக்கு மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுக்க உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்; இப்போதே பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவேண்டும், காசாவில் நடக்கும் இனப்படுகொலை க்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளன. ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம் ஏகாதிபத்தியம், அதன் ஆதரவு சக்திகள், பிற்போக்கு சக்திகள், ஆட்சி யில் உள்ள சர்வாதிகார அமைப்புக் கள் மட்டுமே போர்கள் மற்றும் போர்  பதற்றங்களில் இருந்து பயனடை கின்றன என்று அறிக்கை குறிப்பிட்டுள் ளது. இராக், லிபியா, சிரியாவுக்கு பிறகு இப்போது ஈரானின் இறை யாண்மையை அழிக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முனைந்துள்ளன என்றும், மத்திய கிழக்கில் உள்ள  அனைத்து நாடுகளையும் ஏகாதி பத்திய ஆதிக்கத்தின் கீழ் கட்டாயப் படுத்திக் கொண்டு வரும் வரை அவர்கள் இதை நிறுத்தமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. அணுஆயுத எதிர்ப்பு நிலைப்பாடு மத்திய கிழக்கிலும் உலகளவிலும் அனைத்து அணுஆயுத மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராகவும் இரு  கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பை  தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போர் மத்திய கிழக்கில் அணு ஆயுத பரவலை தடுத்து நிறுத்து வதற்கான வழிமுறை அல்ல என்றும், மாறாக இஸ்ரேல் உட்பட அனைத்து நாடுகளும் அணுஆயுதப் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தில் கை யெழுத்திடுவதும் இந்தப் பிராந்தி யம் முழுவதையும் அணுஆயுதங்களி லிருந்து விடுவிப்பதும் தான் அதற் கான வழியாகும் என்றும் வலியுறுத்தி யுள்ளன. முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு இஸ்ரேல், ஈரான் மற்றும் உல கெங்கிலும் உள்ள அனைத்து முற்போக்கு மற்றும் சுதந்திரத்தை விரும்பும் சக்திகளையும், சர்வதேச சட்டத்தின் இந்த வெளிப்படையான மற்றும் மிருகத்தனமான மீறலை கண்டிக்க ஒன்றிணையுமாறு கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு விரிவான அழிவுகரமான போரைத் தடு ப்பதற்கும் மத்திய கிழக்கில் அமை தியை நிறுவுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன. ஐ.நா.வின் பங்கு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் வெளிப்படுத்திய கவலையை விட உலக மக்கள் ஒரு படி மேலே சென்று ஐ.நா மற்றும் அதன் பாதுகாப்பு அவையின் மூலம் கிடைக் கும் அனைத்து சர்வதேச வழிமுறை களையும் பயன்படுத்தி மத்திய கிழக்கு  பிராந்தியம் ஒரு பேரழிவு தரும் மிகப் பெரிய போரில் சிக்குவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளன. இப்போதே மத்திய கிழக்கில் போரையும் இராணுவ மோதல்களை யும் நிறுத்துங்கள், காசா மீதான போரை  முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பாலஸ்தீன அரசை உடனே அங்கீகரி யுங்கள் என்று அறிக்கையில் இரு கட்சி களும் கோரியுள்ளன.

டிரம்ப்பின் கைகளில் ரத்தக் கறை

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய சட்டவிரோதமான தாக்குதலை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயல் என்று கட்சி தெரிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதல் பாசிச இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள குற்றச் செயல்களின் கூட்டை அம்பலப்படுத்துகிறது என்றும் கட்சி அறிவித்துள்ளது. நேதன்யாகுவின் அரசியல் நோக்கம் உள்நாட்டில் அரசியல் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தனது ஆட்சியைக் காப்பாற்றவே இந்த போரைத் துவங்கியுள்ளார் என்று அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவர் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை வைத்து சூதாட்டம் நடத்துகிறார் என்றும் கூறியுள்ளது. ஆனால் இந்த இரத்தக்கறை அவரது கைகளில் மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைகளிலும் உள்ளது என்றும் சாடியுள்ளது. டிரம்ப்பின் பங்கு போரை ஆதரிக்காதது போல நடித்துக்கொண்டே இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்; ஈரானியர்களை படுகொலை செய்யும் அமெரிக்க ஆயுதங்களைப் பற்றி அவர் தற்பெருமை பேசுகிறார்; மேலும் ஈரான் அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு சரணடையாவிட்டால் அழிந்து போகும் என மிரட்டல் விடுக்கிறார். இது சொந்த பாதுகாப்புக்கான நடவடிக்கை அல்ல என்றும்; இது இராஜதந்திர ரீதியில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை திசை திருப்பி ஈரான் மற்றும் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கீழ்ப்படிய வைக்க அமெரிக்காவின் ஒப்புதலுடன் திட்டமிட்டு இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர் நடவடிக்கை ஆகும் என்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி விளக்கியுள்ளது. இரு கட்சிகளும் போர் ஆதரவு அமெரிக்காவில் பிரதானமாக உள்ள இரு கட்சிகளுமே போரை ஆதரிக்கின்றன என்று கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிண்ட்சி கிரஹாம் முதல் ஜான் ஃபெட்டர்மேன், ரிச்சி டோர்ரஸ் போன்ற ஜனநாயகவாதிகள் வரை, இஸ்ரேல் முழு பிராந்தியத்தையும், உலகையும் போர் மற்றும் பேரழிவின் பக்கம் இழுப்பதை ஆதரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள் தொழிலாளி வர்க்கம், முற்போக்குவாதிகள் மற்றும் அமைதியை விரும்பும் அனைவரும், ஏகாதிபத்தியத்தின் போர்த்திட்டத்தை எதிர்க்க வேண்டும்; ஈரான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள எங்கள் சகோதர கட்சிகளின் அழைப்புகளையே நாங்களும் எதிரொலிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அத்துமீறிய மற்றும் ஆபத்தான செயல்களைக் கண்டிக்கும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, உலகளாவிய தொழிலாளர் மற்றும் அமைதி இயக்கங்களுடன் இணைந்து பின்வரும் கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது: இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்து வரும் இராணுவ உதவியை முழுமையாக நிறுத்த வேண்டும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும், மத்திய கிழக்கில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் ஆகியவையே அந்த கோரிக்கைகள்.