பெருமாநல்லூர் தியாகிகள் 55 ஆம் ஆண்டு நினைவு தினம்
திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் அருகே பெருமாநல்லூ ரில் மின் கட்டண உயர்வுக்கெதிராக போராடியதால் சுட்டு கொல்லப்பட்ட விவசாயத் தியாகிகளின் 55ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தியாகி கள் நினைவு தின ஊர்வலத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் மத்திய மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி முழக்கம் எழுப்பினர். 1970 ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வுக்கெதிராக போராடிய விவசாயி கள் ராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண் டர் ஆகியோர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தில், பெருமாநல்லூரில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவஞ்சலி கூட் டத்திற்கு வடக்கு ஒன்றியத் தலைவர் ஆர். ரங்கசாமி தலைமை வகித்தார். செய லாளர் எஸ்.அப்புசாமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகி யோர் தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினர். இதில், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாநகரச் செயலாளர் பா. செளந்தராசன், விவசாயிகள் சங்க ஒன்றியச் பொருளாளர் ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக பெருமாநல்லூர் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்றனர். அப்போது விவசாயிக ளுக்கு வழங்கப்படும் இலவச மின்சா ரத்தைப் பறிக்கும் மத்திய மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கட் டுப்படியான விலைச்சட்டம் இயற்ற வேண்டும். அவிநாசி – அத்திக்கடவு திட் டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைத்திட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.