திருநெல்வேலி ,மே 29- தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிக ளுக்கான டெண்டர் அடுத்த மாதம் விடப்படுகிறது. தென்னக ரயில்வே பெரும்பாலான இடங்களில் மின்மயப்பாதை பணி களை முடித்து விட்டது . கொல்லம்-புனலூர் இடையே மின்மய பாதை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலான பாதையில் மின்மய பணிக்கான டெண்டர் அடுத்த மாதம் விடப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக் கின்றது, இந்த பாதையில் குகைகள் அதிகம் உள்ளதால் பணி கள் கொஞ்சம் தாமதமாகும் என தெரிகிறது.