tamilnadu

img

மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை  காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

சென்னை, செப்.13 - கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் 11 ஆவது காமன்​வெல்த் நாடாளு​மன்ற சங்​கத்​தின்  இந்​திய பிராந்​திய மாநாடு நடை ​பெற்​றது. இதில் தமிழகம் சார்​பில்  சட்​டப் ​பேரவை தலை​வர் அப்​பாவு, துணைத் தலை​வர் பிச்​சாண்டி ஆகியோர் பங்​கேற்​றனர். மாநாட்​டில் அப்​பாவு பேசி​ய​தாவது:  அமை​தி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்​றும்  இருந்​தால்​தான், மாநிலங்​கள் சிறப்​பாக  இருக்க முடியும் என்ற அடிப்​படை​யிலேயே  இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் வடிவ​மைக்​ கப்​பட்​டுள்​ளது. சமீப ​கால​மாக, அரசி​யல மைப்புச் சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ ளப்​ப​டா​மல், நிர்​வாக ரீதி​யான அறி​விப்​பு​கள், அரசாணை​கள் மூல​மாக கனிமவளம், மீன்​ வளம், கூட்​டுறவு சங்கங்​களுக்​கான அதி​காரங்​கள் மாநில அரசுகளிடம் இருந்து பறிக்​கப் ​பட்​டுள்​ளன. இது கூட்டாட்சிக்கு மிகப்​பெரிய  பின்​னடைவு. மேலும் ஒன்றிய அரசு, மாநிலங்​களின்  கருத்தை கவனத்​தில் கொள்​ளா மல் பொருட்​கள் மீது பல்​வேறு வரி​ களை விதிக்​கிறது. எந்​த​வித​மான  நிதிப் பகிர்​வை​யும் ஒன்றிய  அரசு ஒழுங்​காக மேற்​கொள்​வது இல்​லை.  ஒருங்​கிணைந்த கல்வி (சமக்ர சிக் ஷா) திட்​டத்​தின்​கீழ் மாநில அரசுக்கு தர வேண்​டிய ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு இது​வரை  விடுவிக்​க​வில்​லை. தனி​யார் பள்​ளி​களில்  ஏழை குழந்​தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீ​ட் ​டுக்​கான ஒன்றிய அரசின் பங்​களிப்​பான 60 சத வீத நிதியை கடந்த 4 ஆண்​டு​களாக ஒதுக்​க​ வில்​லை. இதனால், மக்​கள் நல திட்​டங்​களுக்கு  நிதி ஒதுக்​கு​வ​தில் மாநில அரசுக்கு சிரமம்  ஏற்​பட்டுள்​ளது. பிரதமர் மோடி குஜ​ராத்  முதலமைச்ச​ராக இருந்த ​போது கூறிய கருத்​தின் அடிப்​படை​யில், மாநிலங்களுக்கு முழு​மை​யாக நிதி சுயாட்சி வழங்க வேண்​டும்  அல்​லது மாநிலங்​களுக்​கான ஜிஎஸ்டி பங்​கை  75 சதவீத​மாக உயர்த்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.