மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர் களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரூ. 576 கோடியே 73 லட்சத்திற்கான சிறப்பு திட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.7) கேள்வி நேரம் முடிந்ததும், மீனவர் நலன் தொடர்பாக, பேரவை விதி 110-ன்கீழ் சில அறி விப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அப்போது, “தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க, இந்த மாதம் 2 ஆம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, நிரந்தரத் தீர்வு காண்பதற்காக கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரை யும் விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தி இருந்ததை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பெருத்த ஏமாற்றமும் - புறக்கணிப்பும் மேலும், இலங்கை சென்ற பிரதமர் மோடி இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டதை யும், அந்தத் தீர்மானத்தை பிரதமருக்கு உடனடி யாக அனுப்பி வைத்திருந்ததையும் குறிப் பிட்டார். இலங்கை சென்ற பிரதமர் மோடி, மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகளை எடுத்த தாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளுடன் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. இது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக் கிறது. அத்துடன், ஒன்றிய அரசும், பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என்று தனது வேதனைகளை வெளிப்படுத்தினார். மீனவர்களுக்கு துணை நிற்போம் ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டா லும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நாம் தவறமாட்டோம். எப்போதும் துணை நிற்போம். மீனவர்களது பொருளாதா ரத்தை மேம்படுத்தல், அவர்களது மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இலங் கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். தங்கச்சிமடத்தில் மீன்பிடித் துறைமுகம் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக தெற்கு பகுதி யில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வ தற்கு வழிவகை செய்யும் பொருட்டு, தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். மேலும், ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியில், ரூ. 150 கோடிகளில் குந்து கால் பகுதியில் மீன்பிடி துறைமுகப் பணிகள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறி வித்தார். சிறப்பு திட்டங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில் களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவை யான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 52 கோடியே 33 லட்சத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதார மான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54 கோடியே 48 லட்சத்தில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக் கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப் படும். மீன்வளம் சாராத பிற தொழில் வாய்ப்பு களை ஏற்படுத்தித் தர, குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கை வினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14,700 பயனாளிகளுக்கு,ரூ. 53 கோடியே 62 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும். கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள ரூ.25 கோடியே 82 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கி, தொடர் பணிகளும் மேற்கொள்ளப்படும். சுமார் 15,300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட 20 கோடியே 55 லட்சம் ரூபாய் செல வில் திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து மேம்படுத்தும் வகை யில், இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.360 கோடியில் செயல்படுத்தப்படும். மீன வர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.216 கோடியே 73 லட்சம் செலவிடப்படும். மொத்தம் ரூ. 576 கோடியே 73 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்க ளால் மன்னார் வளைகுடா பகுதியைச் சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடை வார்கள். மேலும், மீனவர்களின் வாழ்வாதார மும் மேம்படும். அதுமட்டுமல்ல; நமது மீனவ சகோதரர்களின் குடும்பத்தினர் கூடுதல் வாய்ப்பு கள் பெற்று, அதிகமான பொருளீட்ட வழிவகை ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரி வித்தார். மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு முடிவு கட்டுவோம்: தலைவர்கள் இதையடுத்து, சட்டமன்ற கட்சித் தலைவர் கள் வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எம்.எச்.ஜவாஹிருல்லா, சதன் திருமலைக்குமார், டி. ராமச்சந்திரன், முகமது ஷாநவாஸ், வானதி சீனிவாசன், கோ.க.மணி, தாரகை கத்பர்ட் ஆகி யோர் நன்றி தெரிவித்து பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தாமாக மீன வர் நல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். ஒன்றிய அரசின் வஞ்சிப்பிற்கு இடையில், மீனவர்களின் நீண்ட கால கோரிக் கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்”என்றும்
மகிழ்ச்சி கடலில் மீனவ மக்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி பேசுகையில், “தமிழ்நாட்டு மீனவர்களை ஒன்றிய பாஜக அரசு கைவிட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி கைவிட்டாலும் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பொருளாதாரத்தை உயர்த்த ரூ.576 கோடிக்கும் அதிகமான அளவில் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கும் முதலமைச்சருக்கு நாகப்பட்டினம் மீனவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிகமாக மீனவ கிராமங்களை உள்ளடக்கியது எனது கீழ்வேளூர் தொகுதி. அந்த வகையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தொகுதி மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், மாவட்ட மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது” என்றார்.