tamilnadu

img

எஸ்எப்ஐ அகில இந்திய 18-ஆவது மாநாடு தமிழ்நாட்டு தியாகிகள் நினைவுச் சுடர் புறப்பட்டது

எஸ்எப்ஐ அகில இந்திய 18-ஆவது மாநாடு
தமிழ்நாட்டு தியாகிகள் நினைவுச் சுடர் புறப்பட்டது

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 18-ஆவது அகில இந்திய மாநாடு, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜூன் 27 துவங்கி 30 வரை நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு, தமிழ்நாட்டு மாணவத் தியாகிகளின் நினைவாக சுடர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி, தியாகிகள் சோமசுந்தரம் - செம்புலிங்கம் தங்களின் இன்னுயிரை ஈந்த- திருப்பரங்குன்றம் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி முன்பிருந்து, திங்களன்று புறப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், சோமு - செம்பு அறக்கட்டளை நிர்வாகி எஸ். காளிதாஸ், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், எஸ்எப்ஐ மாநில முன்னாள் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். எஸ்எப்ஐ அகில இந்திய துணைச்செயலாளர் ஆதர்ஷ் எம் ஷாஜி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் தலைமையிலான தியாகிகள் நினைவுச் சுடர் பயணத்திற்கு பெத்தானியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.