tamilnadu

தமிழக அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார்

தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு சங்பரி வார மதவெறி சக்திகள் மேற் கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரம்- கலவர முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

மக்களின் இறைநம்பிக்கையை  தவறாக பயன்படுத்துவதா?

தமிழ்நாட்டின் அமைதியை யும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கோடு மத வெறி சக்திகள்தொடர்ந்து முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன.  திருப்பரங்குன்றத்தில் அமைந் துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆபத்து  ஏற்பட்டுள்ளதைப் போல் ஒரு மாயத்தோற்றத்தை கட்டமைத்து தொடர்ந்து ஒரு மாத காலமாக மக்கள் மத்தியில் தனது வழக்க மான பொய் பிரச்சாரத்தை செய்து  வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அமைந் துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலையும், மலை உச்சி யில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவையும் மையப் படுத்தி மிகவும் தவறான, உண்மைக்கு புறம்பான செய்தி களை முன்னிறுத்தி ‘முருகன் மலையை காக்க திருப்பரங்குன்றத் திற்கு வருக’ என்று தனது அரசி யல் உள்நோக்கங்களுக்காக மக்க ளின் இறை நம்பிக்கையை தவறாக  பயன்படுத்துகிற பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அதன் அமைப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில  செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசின் முன்னெச்சரிக்கை

இந்த அமைப்புகளின் பொய்ப்பிரச்சாரத்தை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் இவர் களின் அழைப்பை முற்றிலுமாக புறக்கணித்து சரியான பாடம் புகட்டியுள்ளனர். இதனால் ஆத்திர முற்ற மதவெறி சக்திகள் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் வன் முறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக  அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நட வடிக்கை காரணமாக அசம்பா விதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப் பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த அனைத்து பகுதி  மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சி களுக்கும், அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது பாராட்டுக்களைத் தெரி வித்துக் கொள்கிறது.

திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக பொதுமக்களால் பின் பற்றப்பட்டு வரும் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது.

இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.