பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம்
பொள்ளாச்சி கும்பல் பாலியல் வன்கொடுமை
தமிழக முதலமைச்சர் உத்தரவு
சென்னை, மே 15 - பொள்ளாச்சி கும்பல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 25 லட்சம் கூடுதல் நிவாரணம் அறிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசார ணைக்கும் ஒத்துழைப்பும் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள் ளது; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத் திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ. 85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.