இடுக்கி, ஜுன் 16- பெண்கள் குழந்தை களின் பாதுகாப்புக்காக கேரள காவல்துறை செயல் படுத்தி வரும் ‘பிங்க் பாட் ரோல்’ (நடமாடும் காவல் துறை) இடுக்கியில் துவக் கப்பட்டது. சிவில் ஸ்டேசனில் நடந்த நிகழ்ச்சியில் இடுக்கி உதவி காவல் கண்காணிப்பாளர் முகம்மது ஷாபி, கொடி யசைத்து துவக்கி வைத்தார். முதல்கட்டமாக ஆயிரக்க ணக்கான வெளிநாட்டு சுற் றுலா பயணிகள் வந்து செல்லும் மூணாறில் திட்டம் துவக்கப்பட்டது. ஒரு பெண் உதவி ஆய்வா ளர், இரண்டு பெண் காவ லர்கள் இடம்பெறும் பாட் ரோல் வாகனத்தின் ஓட்டுந ரும் பெண் காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஓட்டுநரான காவல்துறை ஊழியர் அபர்ணா ராதா கிருஷ்ணனும் பெண் உதவி ஆய்வாளர் என்.என்.சுசீலா வும் முதல் பயணத்தை மேற் கொண்டனர். இளஞ்சிவப்பு நிறத்தி லான இந்த நடமாடும் காவல் வாகனத்தை தொடர்பு கொள்ள 1515 என்கிற கட்டண மில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘பிங்க் பாட்ரோல்’ சேவையை பெற் றுக்கொள்ளலாம்.