tamilnadu

img

சர்வதேச விமானச் சேவைக்கு அனுமதி மறுத்து மதுரை விமான நிலையத்திற்கு அநீதி!

சர்வதேச விமானச் சேவைக்கு அனுமதி மறுத்து மதுரை விமான நிலையத்திற்கு அநீதி!

புதுதில்லி, ஜன. 30 - சர்வதேச விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிப்பதிலிருந்து, மதுரையை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது அநீதியானது; அரசியல் காரணங்களை உள்ள டக்கியது என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரி வித்துள்ளார். கொள்கை ரீதியாக முடிவெடுப்பதற்குப் பதில், விமான நிறுவனங்களிடம் அறிவுறுத்துகிறோம் என்பது ஏமாற்று வேலை என்றும்  சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். ஆசியான் விமானச் சேவை ஒப்பந்தத்தில் புறக்கணிப்பு! மதுரை விமான நிலையத்திலிருந்து கூடுதல் சர்வதேச விமானங்களை இயக்குவது மற்றும் ஆசிய நாடுகளுக்கான (ASEAN) விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது குறித்து மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கடந்த 2025 நவம்பர் 21 அன்று, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 ஆசியான் (ASEAN) நாடுகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ள இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் உள்ள 18 சுற்றுலா நகரங்களின் (Point of Call - POC) பட்டியலில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்மறுப்பு “இவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடியாக விமானங்களை இயக்க வழிவகுக்கும். தற்போது தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மட்டுமே இந்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரண மாக, ‘ஏர் ஆசியா’, ‘பாட்டிக் ஏர்’, ‘சில்க் ஏர்’ போன்ற  நிறுவனங்கள் ‘திறந்தவெளி வானக் கொள்கை யின்’ (Open Skies Policy) கீழ் எவ்வித கட்டுப்பாடு களும் இன்றி அங்கு விமானங்களை இயக்கி வருகின்றன. அவுரங்காபாத்திற்கு  அனுமதி அளித்தது எப்படி? சர்வதேச விமான நிறுவனங்கள், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதி கோரி வரு கின்றன. ஏப்ரல் 2013-ல், சிங்கப்பூர் விமான நிறு வனங்கள் மதுரைக்கு விமானங்களை இயக்க ஏதுவாக, மதுரையையும் புனேவையும் கூடுதல் விமான நிலையங்களாக (Points of Call) அங்கீகரிக்கக் கோரி சிங்கப்பூர் அரசு விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்திய அரசு இதனை ‘கொள்கை முடிவு’ எனக் கூறிதொடர்ந்து மறுத்து வருகிறது.  சர்வதேச விமானங்களை இயக்கத் தொழில் நுட்ப ரீதியாகத் தகுதியற்ற கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமானநிலையங்களும், கடந்த 15 ஆண்டுகளாக ஆசியான் நிறுவனங்களால் ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத (Zero-Utilisation) அவுரங்காபாத், போர்ட் பிளேயர் போன்ற விமான நிலையங்களும் இந்தச் சிறப்புப் பட்டியலில் நீடிக்கின்றன.  மதுரையைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளைக்கொண்ட, அதிக தேவையுள்ள மதுரை விமான நிலையம் இந்தப்  பட்டியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்?” என்று  சு. வெங்கடேசன் எம்.பி. கேள்விகளை எழுப்பி யிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் கிஞ்சராபு நாயுடு பதிலளித்துள்ளார்.  அதில், “தற்போதைய நிலையே தொடரும் என்றும், இந்தக் கொள்கை ஒருமுறை எடுக்கப்பட்ட முடிவு என்பதால் மதுரையைச் சேர்ப்பதற்காக மாற்றி யமைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்குவது என்பது முழுக்க முழுக்க விமான நிறுவனங்களின் வணிக ரீதியான முடிவாகும். பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இருப்பு மற்றும் பொருளாதார ரீதியான லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே நிறுவனங்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. இதில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை. தனியாரிடம் கோரிக்கை என்பது சமாளிப்பு வேலை இருப்பினும், மதுரையின் முக்கியத்துவத்தைக் கருதி, அங்கிருந்து சர்வதேச விமானச் சேவைகளை விரிவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அனைத்து இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (Indian Carriers) ஒன்றிய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது” என்று அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி, சு. வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய அரசுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.  சர்வதேச விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிக்கும் விஷயத்தில், கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, வெறும் அறிவுரை கூறுவதும், விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும் என்றும் விமர்சித்துள்ளார்.