tamilnadu

img

சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

சிவகாசி, மே 28 -  சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கக் கோரி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் (டான்பாமா) பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்துள்ளது. சிவகாசி பட்டாசுத் தொழிலின் முக்கியத்துவம் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,080க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில் 90 சதவீதத்திற்கும் மேல் சிவகாசியில் தான் உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பங்களிப்பு பட்டாசுத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. புவிசார் குறியீடு விண்ணப்பம் இந்நிலையில், சிவகாசி தமிழ்நாடு பட்டாசு-கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டு அலுவலகத்தில் உற்பத்திப் பொருட்கள் பிரிவின் கீழ் கைகளால் உற்பத்தி செய்யப்படும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற புவிசார் குறியீடுகள் விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் சம்பா வத்தலுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில் அடை யாளமான சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளது தொழி லாளர்கள் மற்றும் பொது மக்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. புவிசார் குறியீட்டின் பயன்கள் புவிசார் குறியீடு பெற்றால், சிவகாசி பட்டாசுகளின் தரம் மற்றும் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு, உலக சந்தையில் சிறப்பு அடையாளம் பெறும். இது தொழிலின் வளர்ச்சிக்கும், ஏற்றுமதி அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்.