5 நாட்கள் தொடர் மழை மகாராஷ்டிராவில் 16 பேர் பலி
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தென்மேற்கு பருவ மழை காரணமாக மகாராஷ்டி ரா மாநிலத்தில் மே 24 முதல் 28ஆம் தேதி வரை கனமழை புரட்டியெடுத்தது. மும்பை நகரம், மும்பை புறநகர், வோர்லி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 5 நாட்களில் நிலச்சரிவு, மின்னல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் சமீ பத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, கவுகாத்தி (அசாம்) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதி பதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய் யப்பட்டுள்ளனர். 3 நீதிபதிகளின் நிய மனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந் துள்ளது.
திசை திரும்பிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வங்கத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை திரும்பி மேற்கு வங்கம் - வங்கதேசம் நோக்கி திசை திரும்பி, காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல் கத்தா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாநி லத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதீத அளவில் கனமழை அதிகரிக்கக் கூடும் என வானிலை அறிக்கைகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. பலத்த காற்று வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கா னாஸ், நாடியா, முர்ஷிதாபாத், புர்பா, பாஸ்சிம் பர்தமான் மற்றும் பிர்பும் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த 48 மணிநேரத்துக்கு அம்மாநில மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மேற்கு வங்க அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
‘பாலியல்’ பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் சிங் 100 கார்கள், 10,000 பேருடன் ‘விடுதலை’ கொண்டாட்டம் நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யும், இந்திய மல் யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த கூட்டமைப்பு பதவியில் இருந்த காலத்தில் பல மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்க கோரியும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட பல வீராங்கனைகள் இரவு, பகலாக தில்லி யில் போராடினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பிரிஜ் பூஷண் சிங் மீது தில்லி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்தனர. புகார் தாரர்களில் ஒருவர் மைனர் பெண் என்பதால், பிரிஜ் பூஷண் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கு இடையில் பிரிஜ் பூஷணை மோடி அரசு அவரை காப்பாற்ற தீவிர மாகி இறங்கியது. போராட்டம் நடத்திய வீரர் - வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தி, போராட்டக் களத்தை துவம்சம் செய்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜ ரான மைனர் பெண்ணின் தந்தை, தனது மகள் பொய் கூறிவிட்டதாக தெரிவித் தார். இதையெடுத்து பிரிஜ் பூஷணுக்கு எதிரான போக்சோ வழக்கை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. கொண்டாட்டம் இத்தகைய சூழலில், பிரிஜ் பூஷண் சிங் புதன்கிழமை அன்று அயோத்தியில் 100 எஸ்யுவி கார்கள், 10,000 ஆதரவா ளர்களுடன் வெற்றி வலம் வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நகர் முழுவதும் கார்களில் வலம் வந்து, வழக்கில் இருந்து விடுதலையானதை அவர் கொண்டாடினார். பாலியல் வழக்கில் சிக்கி விடுதலையான பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் சிங் 100 கார்கள், 10,000 பேருடன் பேரணி மூலம் கொண்டாடியதற்கு நாடு முழு வதும் வலுக்கும் கண்டனம் வலுத்து வருகிறது. குறிப்பாக இந்த கொண்டாட் டத்தின் போது மது விருந்து நடந்த தாகவும் கூறப்படுகிறது. வினேஷ் போகத் கடும் கண்டனம் அதே போல பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்யப்பட்டதற்கு முன்னாள் மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான வினேஷ் போகத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,”பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் அவர்களே! காவல்துறை உங்களுடை யது, தலைவர் உங்களுக்கு வேண்டப் பட்டவர். நீங்கள் பொய்யை உண்மை யாக வெளியிடுகிறீர்கள். செய்தித்தாள் உங்களுடையது. உங்களுக்கு எதிராக எங்கே புகார் செய்வது? அரசாங்கம் உங்களுடையது. ஆளுநரும் உங்களு டையர்” என்று ஆதங்கத்துடன் பதி விட்டுள்ளார். அயோத்தியில் மது விருந்தா? ராமர் கோவில் இருப்பதால் அயோத்தியில் மது விற்பனைக்கு கட்டுப் பாடுகள் விதிப்பதாக உத்தரப்பிரதேச பாஜக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் பிரிஜ் பூஷண் சிங் அயோத்தி யில் மது விருந்து நடத்த யார் அனுமதி அளித்தது? என சந்தேகங்கள் கிளம்பி யுள்ளன.