கீரனூர் உத்தமநாத சுவாமி தேர் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளோட்டம் அமைச்சர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏ எம்.சின்னதுரை பங்கேற்பு
புதுக்கோட்டை, மே 29- நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடை பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் உத்தமநாத சுவாமி கோவில் தேர் வெள்ளோட்ட நிகழ்வில், அமைச்சர் எஸ்.ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பழமை வாய்ந்த உத்தமநாத சுவாமி உடனுறை பிரகதாம்பாள் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பாக தேரடி என்ற இடம், கீரனூரின் முக்கிய அடையாள மாக உள்ளது. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோவிலில் தேரோட்டம் நடைபெற வில்லை. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.சின்னதுரையிடம் உத்தமநாதசுவாமி தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீரனூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.சின்னதுரை வாக்கு றுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய தோடு, புதிய தேர் செய்வதற்கு நிதி ஒதுக்கும்படியும் எம்எல்ஏ எம்.சின்ன துரை மனுக் கொடுத்து வலியுறுத்தி னார். திமுக மாவட்டச் செயலாளர் கே. செல்லப்பாண்டியனும் இக்கோரிக்கை குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து புதிய தேர் செய்வதற்கு ரூபாய் ஒரு கோடியே மூன்று லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தேர் செய்யப் பட்டது. இத்தேரின் வெள்ளோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தேர் வெள்ளோட்ட நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலை மை வகித்தார். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வடத்தைத் தொட்டு தேரோட்ட நிகழ்வைத் தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். மேலும், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் ஆட்டம், கோலா ட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நட னத்துடன் அலங்கார குதிரையின் நடனம், செண்டை மேளம் மற்றும் மேள தாளங்கள் முழங்க வெகு விமர்சை யாக தேர் வெள்ளோட்டம் நடை பெற்றது.