மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு
கொச்சி கப்பல் விபத்து
லைபீரியாவின் “எம்எஸ்சி எல்சா 3” சரக்குக் கப்பல் கொச்சி கடலில் மூழ்கிய விபத்து கேரள மாநில பேரி டராக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப் பட்டது என்றும், கப்பல் விபத்தைத் தொடர்ந்து கரையிலிருந்து பிளா ஸ்டிக் துகள்களை (நார்ட்ஸ்) அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கேரள முதலமைச் சர் அலுவலகம் புதனன்று தெரி வித்திருந்தது. மேற்பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை பிளாஸ்டிக் துகள்களை (நார்ட்ஸ்) அகற்ற தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன் கணக்கெடுப்பு நடத்துவது உட்பட, ஒவ்வொரு 100 மீட்டருக்கும் தன்னார்வலர்களை நியமித்து பிளாஸ்டிக் துகள்களை அகற்று வதே தற்போதைய முயற்சியா கும். இதை ஒருங்கிணைக்க காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களின் பாதுகாப் பிற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தன்னார் வலர்கள் எந்த ஆபத்தான நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்பதை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த கட்டத்தில், பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித் துறையின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட நடவ டிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னு ரிமை அளித்து வருகிறது. நார்டெல்கள் என்று தவறாக நம்பும் எந்த வெள்ளைப் பொடிக ளையும் தொட வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருட்களின் படங்களையும் எடுத்து உள்ளூர் காவல்துறை, தீய ணைப்புப் படை அல்லது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களுக்கு அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி யதற்கான காரணம் இயந்திரக் கோளாறு என முதல்கட்ட கண்டு பிடிப்புகள் புலப்படுத்துவதாக கப்பல் போக்குவரத்து இயக்குநர கம் தெரிவித்திருந்தது. கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜென ரல் ஷியாம் ஜகநாதன், தலைமை சர்வேயர் மற்றும் கூடுதல் இயக்கு நர் ஜெனரல் அஜித் குமார் சுகுமா ரன் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தனர். கப்பலின் பிளாஸ்ட் தொட்டி யில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோ ளாறு காரணமாக கப்பல் மூழ்கி யது. உருளுவதால் ஏற்படக் கூடிய விபத்துகளைத் தடுக்க கப்பல்களின் அடிப்பகுதியில் தண் ணீரைச் சேமிக்கும் தொட்டிகள் பாளாஸ்ட் தொட்டிகள் ஆகும். இந்த அமைப்பில் உள்ள வால்வு கள் சரியாக வேலை செய்ய வில்லை. இதன் காரணமாக, கப்ப லின் மின் அமைப்பு செயலிழந்து கப்பல் சாய்ந்தது. மோசமான வானிலை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்தது. 54 கண்டெய்னர்கள் சரக்குக் கப்பல் கவிழ்ந்த பிறகு மேலும் நான்கு கண்டெய்னர்கள் புதனன்று திருவனந்தபுரம் மாவட் டத்தின் கடற்கரையை அடைந்த பின் மூழ்கின. இதன் மூலம், கேரள கடற்கரையில் கரையொதுங்கிய கண்டெய்னர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. புதன் கிழமை தும்பா, விழிஞ்ஞம், பூவார் மற்றும் கரிங்குளம் கடற்கரைகளில் இருந்து தலா ஒரு கண்டெய்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் நார்டெல்கள் என்று கண்டறியப்பட்டது.